வடகொரியாவின் புதிய பிரதமராக பாக் பாங்-ஜூ (74) நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கொரியா, அமெரிக்காவுடன் போர் நடத்த ஆயத்தமாகி வரும் சூழ்நிலையில், வடகொரியாவில் இந்த திடீர் நியமனம் நடந்துள்ளது. வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் அனைத்து அதிகாரத்தையும் வைத்துள்ளார்.
பிரதமர் பதவி, நாடாளுமன்றம் உள்ளிட்டவை அங்கு பெயரளவில்தான் செயல்பட்டு வருகின்றன. இப்போது பிரதமராக இருந்த சோய் யாங்-ரிம் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2003-07-ம் ஆண்டு வரை பாக் பாங்-ஜூ பிரதமராக இருந்தார். அப்போது அவர் மேற்கொண்ட சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கட்சியிலும், ராணுவத்திலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
திங்கள்கிழமை கூடிய வடகொரிய நாடாளுமன்றத்தின் முன்னிலையில் பாக் பாங்-ஜூ பதவியேற்றார். வடகொரியாவை அணுஆயுத நாடு என்று அவசர சட்டமும் கொண்டு வரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்! தற்சாா்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா்!

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
முடிவுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்: 61 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்

தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுரை மண்டல ஐ.ஜி. ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



