மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் சாவு

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

Updated On :11 ஜூன் 2013, 7:42 pm

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் - அஸாதின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை டமாஸ்கஸின் மார்ஜே சதுக்கம் அருகே உள்ள காவல் நிலையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டனிலிருந்து செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, ""ஒரு குண்டுவெடிப்பு காவல் நிலையத்துக்குள்ளும், வெளியே மற்றொரு குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.