அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய இணையதள உளவுத் திட்டத்துக்கு, உலக முழுவதும் 150 இடங்களில் 700 ரகசிய செர்வர்களை நிறுவியுள்ளது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதில் ஒன்று இந்தியாவில் நிறுவப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உளவுத் திட்டம் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் வாயிலாக தெரிய வந்தது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மூலம் நடத்தப்படும் எக்ஸ்கீஸ்கோர் என்ற திட்டத்துக்கு அளிக்கப்பட்ட உபகரணங்களில், உளவு கம்ப்யூட்டர் செர்வர்கள் எங்கெங்கு நிறுவப்பட்டுள்ளன என்ற விபரங்கள் அடங்கிய வரைபடமும் அடங்கும். அந்த செர்வர்களில் ஒன்று புதுதில்லி அருகே நிறுவப்பட்டிருப்பது வரைபடத்தில் காணப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியதும், எந்தவொரு நாட்டையும் உளவு பார்க்க இந்த செர்வரை பயன்படுத்தவில்லை.
எங்களது உளவு நிறுவனம் பன்னாட்டு உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை சிறப்பாக அறிந்துகொள்ளவும், பயங்கரவாதிகளின் இலக்குகளை அறிந்துகொள்ளவும் இந்த உபகரணத்தை பயன்படுத்தியதாக அமெரிக்கா விளக்கம் அளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

