/

ஜெர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 8 பேர் பலி: பலர் காயம்

ஜெர்மனியில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Updated On :9 பிப்ரவரி 2016, 11:44 am

ஜெர்மனியில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பவாரியா என்ற இடத்தில், இந்த ரயில் விபத்து நேரிட்டுள்ளது. இதில் ரயில்களின் பல பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

உடனடியாக மீட்புக் குழுவினர் விபத்துப் பகுதிக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.