ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஹார்வே புயல்: இந்திய மாணவன் உட்பட 20 பேர் பலி

ஹார்வே புயலால் பாதிக்கப்பட்ட டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டனர். இந்திய மாணவன் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2017, 10:57 am

DIN

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சக்திவாய்ந்த ஹார்வே புயல் தாக்கியது. இதையடுத்து அங்கிருந்த வீடு, வாகனம், மரம் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.

இந்தப் புயலை அடுத்து வரும் புதன்கிழமை வரை சுமார் 127 சென்டிமீட்டர் அளவுக்கு மழை இருக்கும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியின் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. அனைவரும் வீடுகளில் முடங்கினர். அமெரிக்காவின் தேசிய பேரிடர் மீட்புக் குழு துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை 2,300-க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் ஹாஸ்டன் நகர தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மேலும் பலர் சிக்கியுள்ளனர்.

மொத்தம் 13,000 பேர் தேசிய மற்றும் உள்ளூர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி இந்திய மாணவன் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.