பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுரை

பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது. 
பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுரை
Updated on
1 min read

பாகிஸ்தானில் வசித்து வரும் சீனர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவர்களின் மீது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார கூட்டு நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தானில் மொத்தம் 4 லட்சம் சீனர்கள் வசித்து வருகின்றனர். பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி சீன அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், தேவைப்பட்டால் பாகிஸ்தான் ராணுவம், போலிஸ் அல்லது சீனத் தூதரகம் ஆகியவற்றை உடனடியாக அணுகவேண்டும் என்று சீன மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com