அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு அலுவலகங்களை கைப்பற்றிய தீவிரவாதிகள்: இந்தோனேசியாவில்  பதட்டம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாண்டங் நகரத்தில் இன்று காலை நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியதால் பதற்றம் நிலவுகிறது.

News image
Updated On :27 பிப்ரவரி 2017, 9:56 am

DIN

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாண்டங் நகரத்தில் இன்று காலை நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியதால் பதற்றம் நிலவுகிறது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாண்டங் நகரம் உள்ளது. இங்கு நிறைய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இன்று காலை அங்குள்ள ஒரு பூங்காவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அங்கிருந்த அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து அவற்றை கைப்பற்றினர். உள்ளே இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அலுவலகத்தை சுற்றி வளைத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு மற்றும் வெடி குண்டு வீச்சு நடந்ததால் அந்த இடமே போர்க்களம்  போல் காட்சியளித்தது.  இதனிடையே அங்கிருந்த தீவிரவாதிகள் அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.

அவர்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த போலீசார் தீவிரமாக முயன்ற நிலையில் டி.வி. நிலையத்தையம் தீவிரவாதிகள் மர்மநபர்கள் கைப்பற்றினர். ஆனால் இதற்கு எந்த ஒரு தனிப்பட்ட தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.