மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிநவீன போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியது சீனக் கடற்படை

சீனக் கடற்படை, 10 ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையிலான அதிநவீன போர்க்கப்பலை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

News image
சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜியாங்னன் கப்பல் கட்டுமானத் தளத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட அதிநவீன போர்க்கப்பல்.
Updated On :28 ஜூன் 2017, 8:45 pm

DIN

சீனக் கடற்படை, 10 ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையிலான அதிநவீன போர்க்கப்பலை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்தப் போர்க்கப்பல், இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைக்கு கடும் சவாலாக விளங்கும் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜியாங்னன் கப்பல் கட்டுமானத் தளத்தில் "055 டிஸ்ட்ராயர்' வகை போர்க்கப்பலை சீனக் கடற்படை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். டிஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்களில் இது அடுத்த தலைமுறைக் கப்பலாகும். இந்தப் போர்க்கப்பலில் நவீன ரக ஏவுகணைகளும், எதிரிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் இருக்கும்.
மொத்தம் 10ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையில் இந்தப் போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 போர் விமானங்களையும் இந்தக் கப்பலில் நிறுத்த முடியும். இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளதன் மூலம் சீனக் கடற்படை மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை பல்வேறு சோதனைகளுக்கு உள்படுத்த சீனக் கடற்படைத் திட்டமிட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி செய்து வருவதால், அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தனது கடற்படையை சீனா மேலும் வலிமையாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.