அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களிடையே கடும் சண்டை: சிரியாவில் ஒரே நாளில் 47 பேர் பலி!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸில் அரசுப் படைகள் மற்றும் போராளிக் குழுக்களிடையே  நடைபெறும் சண்டையில் இன்று ஒரே நாளில் 47 பேர் பலியாகினர்.

Published On :29 ஜனவரி 2024, 4:46 pm IST

டமாஸ்கஸ்: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸில் அரசுப் படைகள் மற்றும் போராளிக் குழுக்களிடையே  நடைபெறும் சண்டையில் இன்று ஒரே நாளில் 47 பேர் பலியாகினர்.

சிரியாவில் அரசுப்படைகளுக்கும், அரசுக்கு எதிராக போராடிவரும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள  பல்வேறு போராளிக்கு குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

அந்த கவகையிகள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதற்கு வடகிழக்கே அமைந்துள்ள ஜுபைர்  ஆகிய இரு இடங்களிலும் கடும் சண்டை நடந்தது.இதில் ஜுபைர்   னபாரத்தில் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களும் நடைபெற்றன.

இந்த  இரு தாக்குதல்களிலும் சேர்த்து இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் மரணமடைந்தனர்.

இந்த தகவல்களை சிரியன் ஆபிஸர்வேட்டரி பார் ஹியூமன் ரைட்ஸ் எனும் போர் கண்காணிப்பு அமைப்பு  வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.