கொழும்பு: வாராணசி - கொழும்பு இடையே ஏர் இந்தியா நிறுவனத்தின் நேரடி விமான சேவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்று இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, சர்வதேச விசாக் தின விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த விமான சேவை மூலமாக இலங்கையில் வாழும் எனது தமிழ் சகோதர சகோதரிகள், வாராணசி வந்து, அங்கிருக்கும் காசி விஸ்வநாதரை தரிசிக்க முடியும்.
வாராணசியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற புத்தஸ்தலமான சர்நாத் ஆலயத்தையும், அதன்பிறகு, பிகாரில் உள்ள போத் கயாவையும் தரிசிக்க வழி ஏற்படும்.
புத்த மதத்தை சார்ந்த ஏராளமான மக்கள் வசிக்கும் இலங்கையில் இருந்து நேரடி விமான சேவை வழங்குவதன் மூலம் புத்தரின் பூமியில் உள்ள குசிநகர், கவுசம்பி, சார்நாத் உள்ளிட்டஇடங்களுக்கு இலங்கை மக்கள் எளிதாக வந்து சேர முடியும் என்று கூறினார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி கடந்த 2 ஆண்டுகளில் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!

பவானிபூரில் முதல்வர் மமதா சாலைவலம்; பொதுமக்களுடனும் கலந்துரையாடல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


