பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: லக்னௌ விரைந்தார் எல்.கே அத்வானி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராக தில்லியில் இருந்து எல்.கே.அத்வானி லக்னௌவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

News image
Updated On :30 மே 2017, 5:22 am

DIN

லக்னௌ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராக தில்லியில் இருந்து எல்.கே.அத்வானி லக்னௌவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று லக்னௌ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இவருடன், மத்திய அமைச்சர் உமா பாரதி, மற்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் ஆஜராக உள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை தொடர உத்தரவிட்டதுடன் 2 ஆண்டுகளில் வழக்கை முடிக்கவும் அறிவுறுத்தியது.

அதன்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின் போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் வரும் 30-ம் தேதி நேரில் தவறாமல் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.