டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

2017-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு!

மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு  மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2017, 9:55 am

DIN

ஸ்டாக்ஹோம்: மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு  மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மருத்துவதுறைக்கான நோபல் பரிசுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அதனை அறிவித்தார்.

இந்த ஆண்டுக்கான மருத்துவதுறை நோபல் பரிசினை உடலின் உயிர்க் கடிகாரம் என்று அழைக்கப்படும் 'பயலாஜிக்கல் க்ளாக்' ஆனது பிரபஞ்ச இயக்கத்திற்கான செயல்பாடுகளுடன் ஒத்து அமைந்துள்ளது என்பதனை காட்டும் அடிப்படை மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தமைக்காக மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஜெப்ரி ஹல், மைக்கேல் ரோஸ்பேஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகிய மூவரே அந்த விருதினை பெறுபவர்களாவார்கள். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.