குழாயின் ஒரு பகுதியை கொண்டு வந்த கருப்பின இளைஞரை துப்பாக்கி வைத்திருந்ததாக தவறாக கருதி அமெரிக்க போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.
புரூக்ளின் பகுதியில் துப்பாக்கி போன்ற ஒரு வித ஆயுததத்துடன் கருப்பின இளைஞர் ஒருவர் நடமாடுவதாக போலீஸாரின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு மூன்று அழைப்புகள் வந்தது. இதையடுத்து, அந்த கருப்பின இளைஞரை சுற்றிவளைத்த போலீஸார் அவரை சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த இளைஞர் துப்பாக்கியை இரண்டு கையால் கொண்டு சுடுவதுபோல் போலீஸாரை நோக்கி குறிவைத்துள்ளார்.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அந்த போலீஸார் கருப்பின இளைஞரை நோக்கி 10 முறை சுட்டனர். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த கருப்பின இளைஞரை சோதித்து பார்த்ததில் துப்பாக்கி இல்லாமல் இரும்பு போன்ற ஒரு குழாயை மட்டுமே அவர் கையில் வைத்திருந்தது தெரியவந்தது.
போலீஸாரின் இந்த நடவடிக்கையையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் அவர்களின் இந்த செயலுக்கு கண்டணங்களை தெரிவித்து கோஷமிட்டனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் சாக்ரமென்டோ நகரில் ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞர் ஸ்டீபன் கிளர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், போலீஸார் நடத்திய பரிசோதனையில் அந்த இளைஞர் ஐபோன் மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது. இதனை கண்டித்து அப்பகுதியில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







