சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இரும்பு குழாயை துப்பாக்கி என கருதிய போலீஸார்: அமெரிக்காவில் கருப்பின இளைஞர் சுட்டுக் கொலை

குழாயின் ஒரு பகுதியை கொண்டு வந்த கருப்பின இளைஞரை துப்பாக்கி வைத்திருந்ததாக தவறாக கருதி அமெரிக்க போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.

News image

இரும்புக் குழாயை துப்பாக்கி போல் காட்டி பாதசாரிகளை மிரட்டும் இளைஞர் (உள்படம்). இளைஞரின் உயிரைப் பறித்த குழாய்.

Updated On :6 ஏப்ரல் 2018, 12:54 am IST

குழாயின் ஒரு பகுதியை கொண்டு வந்த கருப்பின இளைஞரை துப்பாக்கி வைத்திருந்ததாக தவறாக கருதி அமெரிக்க போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனர்.
புரூக்ளின் பகுதியில் துப்பாக்கி போன்ற ஒரு வித ஆயுததத்துடன் கருப்பின இளைஞர் ஒருவர் நடமாடுவதாக போலீஸாரின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு மூன்று அழைப்புகள் வந்தது. இதையடுத்து, அந்த கருப்பின இளைஞரை சுற்றிவளைத்த போலீஸார் அவரை சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த இளைஞர் துப்பாக்கியை இரண்டு கையால் கொண்டு சுடுவதுபோல் போலீஸாரை நோக்கி குறிவைத்துள்ளார். 
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அந்த போலீஸார் கருப்பின இளைஞரை நோக்கி 10 முறை சுட்டனர். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த கருப்பின இளைஞரை சோதித்து பார்த்ததில் துப்பாக்கி இல்லாமல் இரும்பு போன்ற ஒரு குழாயை மட்டுமே அவர் கையில் வைத்திருந்தது தெரியவந்தது. 
போலீஸாரின் இந்த நடவடிக்கையையடுத்து அங்கு குவிந்த பொதுமக்கள் அவர்களின் இந்த செயலுக்கு கண்டணங்களை தெரிவித்து கோஷமிட்டனர். 
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் சாக்ரமென்டோ நகரில் ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞர் ஸ்டீபன் கிளர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், போலீஸார் நடத்திய பரிசோதனையில் அந்த இளைஞர் ஐபோன் மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது. இதனை கண்டித்து அப்பகுதியில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.