சான் பிரான்சிஸ்கோ: பிரபல தேடுபொறி தளமான கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
உலகின் பிரபல தேடுபொறி தளம் கூகுள். இதன் தேடல் மூலம் கிடைக்கும் பதில்களுக்கு பெரிய அளவில் நம்பகத்தன்மை உள்ளது. அதே சமயம் தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் 'அல்காரிதம்' தகவல்களை ஒழுங்கமைக்கும் விதத்தில் குறைபாடுகள் உள்ளது. இதன் காரணமாக நாம் விரும்பும் பதில்களை அதன் தேடல் முடிவுகளில் கொண்டு வர முடியும் என்பது அதன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் கூகுளில் 'முட்டாள்' என்று படப்பிரிவில் தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்த குழப்பமானது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகளால் எரிச்சலடைந்த ஆன்லைன் செயல்பாட்டாளர்களின் கைங்கர்யம் என்று கருதப்படுகிறது. முதலில் 'ரெட்டிட்' என்ற இணைய தளத்தில் இவர்களொரு குழுவாக இணைந்து 'முட்டாள்' என்ற வார்த்தையை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படத்துடன் இணைக்கும் வேலையை தொடர் ஓட்டெடுப்பு மூலம் உருவாக்கினார்கள். இதனை ஒரு 'ஆன்லைன் போராட்டம்' என்ற அளவில் அவர்கள் தீவிரத்துடன் நடத்தினார்கள்.
இதன் விளைவாக கூகுள் உபயோகப்படுத்தும் ' அல்காரிதம்' இந்த தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு, யார் அந்த வார்த்தையை இட்டுத் தேடினாலும் ட்ரம்பின் படத்தைக் காட்டுகிறது.தற்பொழுது இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதேபோல கடந்த மே மாதம் கூகுளின் தேடல் முடிவுகளில் 'பப்பு' என்ற இந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுலின் படமும், 'பேகு' என்ற இந்தி வார்த்தைக்கு பிரதமர் மோடியின் படமும் வெளி வந்தது சர்ச்சைக்குளானது. முன்னதாக ஏபல் மாதம் 'இந்தியாவின் முதல் பிரதமர்' என்ற கேள்விக்கும் மோடியின் படம் பதிலாக வந்தது. பின்னர் இந்த தவறை அந்நிறுவனம் திருத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அண்ணாமலை அடுத்து என்ன செய்யப் போகிறார்?

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



