அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தேர்தல் பிரசாரத்திற்கு முன்னாள் லிபிய அதிபரிடம் நிதியுதவி: பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி கைது! 

தேர்தல் பிரசாரத்திற்கு முன்னாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான முகமது கடாபியிடம் இருந்து நிதியுதவி பெற்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :20 மார்ச் 2018, 6:12 pm IST

பாரீஸ்: தேர்தல் பிரசாரத்திற்கு முன்னாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான முகமது கடாபியிடம் இருந்து நிதியுதவி பெற்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி (வயது 63).  கடந்த 2007-ம் ஆண்டு பிரான்ஸ் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது தேர்தல் பிரசாரத்திற்காக அப்பொழுது லிபிய அதிபராக இருந்த முகமது கடாபியிடம் இருந்து நிகோலஸ் சர்கோசி பெருமளவில் பணம் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.

சர்கோசியின் தேர்தல் பிரசாரத்திற்கு நிதியுதவி வழங்கினோம் என்று லிபியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபி மற்றும் அவரது மகன் செய்ப் அல் இஸ்லாம் ஆகிய இருவரும் புகார் கூறியிருந்தனர்.  ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சர்கோசி நிராகரித்து விட்டார்.

பின்னர் இதுபற்றிய வழக்கு 2013ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் சர்கோசியின் முன்னாள் உதவியாளர் அலெக்சாண்டிரி டிஜோஹ்ரி, அவரது அமைச்சரவை சகாவான பிரைஸ் ஹார்டிபியூயெக்ஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு சர்கோசி தற்பொழுது வரை பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் முகமது கடாபியிடம் இருந்து நிதியுதவி பெற்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி கைது செய்யப்பட்டுள்ளார்.  காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.