ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 6.15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நில நடுப்பத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இதேபோல் தைவானிலும் இன்று காலை 5.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவானது.