பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

எல்லையில் பதற்றம்: பாகிஸ்தானில் முக்கிய விமான நிலையங்கள் மூடல் 

இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக பாகிஸ்தானில் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 3:18 pm IST

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக பாகிஸ்தானில் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை செவ்வாயன்று தாக்குதல் நடத்தியது. அதற்கு எதிர்வினையாக புதனன்று இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள், காஷ்மீரின் ரஜோரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் அருகே   குண்டுகளை வீசியிருக்கின்றன. இதன்காரணமாக இருநாடுகளிடையே போர்ப்பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக பாகிஸ்தானில் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்துக்கு ஆணையத் தகவல்களை மேற்கோள் காட்டி 'டான்' செய்தித் தளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் பின்வருமாறு:

பாகிஸ்தானின் லாகூர், முல்தான், கராச்சி, பைசலாபாத், சியால்கோட் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பெஷாவரில் உள்ள பச்சா கான் சர்வதேச விமான நிலையமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து ராணுவ விமானங்கள் செயல்படுமென்று தெரிகிறது.

பாகிஸ்தான் முழுவதும் உச்ச கட்ட 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.