ஆப்கன் ராணுவத் தளத்திற்கு அருகில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி 

ஆப்கானிஸ்தான் ராணுவத் தளத்திற்கு அருகில் நிகழ்ந்த தற்கொலைப்படை  தாக்குதலில்  மூன்று தீவிரவாதிகள் உட்பட 12 பேர் பலியாகினர் 
ஆப்கன் ராணுவத் தளத்திற்கு அருகில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி 
Updated on
1 min read

காபூல்: ஆப்கானிஸ்தான் ராணுவத் தளத்திற்கு அருகில் நிகழ்ந்த தற்கொலைப்படை  தாக்குதலில்  மூன்று தீவிரவாதிகள் உட்பட 12 பேர் பலியாகினர் 

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே பல வருடங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படைகள் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவத் தளத்திற்கு அருகில் நிகழ்ந்த தற்கொலைப்படை  தாக்குதலில்  மூன்று தீவிரவாதிகள் உட்பட 12 பேர் பலியாகினர் 
 
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

திங்கட்கிழமையன்று  காலை  ஆப்கானிஸ்தானில் மத்தியப் பகுதியிலுள்ள வார்டக் மாகாணத்திலுள்ள ராணுவத் தளம் ஒன்றுக்கு அருகில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது.

தீவிரவாதிகள் நிகழ்த்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் உட்பட 12 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். 

இவ்வாறு ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com