டாக்கா: கேமராவை உற்று நோக்கும் வங்கதேச கட்டுமானத் தொழிலாளரின் புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் அபெதின்மங். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த 21-ஆம் தேதி பச்சைக் கண்களுடன் கேமராவை உற்று நோக்கும் சிற்பம் போல் அமைந்த இளைஞர் ஒருவரின் புகைப்படமொன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்தாவது:
இந்தப் புகைப்படமானது கோலாலம்பூரில் உள்ள கட்டுமான தளம் ஒன்றில் எடுக்கப்பட்டது. இந்த இளைஞர் வங்கதேசத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர். அவர் மிகவும் வெட்கப்பட்டார். படத்தை எடுத்தது அலைபேசி என்பதால் அவருக்கு எங்கு பார்ப்பது என்றே தெரியவில்லை. நான் அவருக்கு கேமராவைப் பலமுறை சுட்டிக் காட்டினேன். நிறைய ஷாட்டுகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவை நன்றாக இல்லை. கடைசியாக அவர் கேமராவை நேருக்கு நேராக பார்த்த போது இது எடுக்கப்பட்டது. நன்றாக இருக்கிறது இல்லையா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படமானது இதுவரை 24,500 பேரால் ரீ ட்வீட் செய்யப்பட்டிருப்பதுடன், 68,700 பேர் லைக் செய்துள்ளார்கள். இதனால் இது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தத் தகவலை வங்கதேசத்திலிருந்து வெளிவரும் 'டெய்லி ஸ்டார் பங்களாதேஷ்' செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


