இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன்வெய்தோங் மற்றும் அவரின் மனைவி செப்டம்பர் 3-ஆம் தேதி, இந்தியத் தலைநகர் புதுதில்லியில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
இந்திய அரசு, இராணுவ வட்டாரம், நட்புறவு அமைப்புகள் முதலிய பல்வேறு துறையினர், இந்தியாவுக்கான வெளிநாட்டுத்தூதர்கள், அதிகாரிகள், இந்தியாவுக்கான சீனாவின் செய்தி நிறுவனங்கள், சீனத் தொழில் நிறுவனங்கள் முதலிய 500 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
சீனாவும் இந்தியாவும் ஒரே குரலில் ஒலித்தால், அது உலகம் முழுவதும் கேட்கும். இரு நாடுகளுக்கிடையில் அறிவுத் திறமை மற்றும் ஆற்றல் அதிகமாகவே உள்ளன.
இவற்றின் மூலம், புதிதாக வளரும் நாடுகளுடன் கூட்டாக ஒத்துழைப்பது கூட்டு நலன் தரும் பாதையில் இரு நாடுகளும் நடைபோடும் என்று சுன்வெய்தோங் தெரிவித்தார்.