சீன நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து: 14 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் செயல்பட்டு வந்த நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தென்மேற்கு சீனாவில் செயல்பட்டு வந்த நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு சீனாவில் உள்ள குய்சௌ மாகாணத்தில் நடந்த இந்த விபத்தில் மேலும் இருவர் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்கனவே பலமுறை இதேபோன்று வெடி விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com