அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச் சபை தலைமையகத்தில் காந்தி சூரியப் பூங்காவை செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியா அதிபர் மூன்-ஜெய்-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சூரிய பூங்காவை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினத்தை முன்னிட்டு புகழஞ்சலி செலுத்த உலகம் ஒன்று சேர்ந்துள்ளது. காந்திய நினைவுகளைப் போற்றும் விதமாக இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.