காந்தி நினைவு ஐ.நா. தபால் தலை வெளியீடு
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியா அதிபர் மூன்-ஜெய்-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.


அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச் சபை தலைமையகத்தில் காந்தி சூரியப் பூங்காவை செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.
இதில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியா அதிபர் மூன்-ஜெய்-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஐ.நா தலைமையகத்தில் 'தற்கால உலகில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு' என்ற நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உலகத் தலைவர்களும் பங்கேற்றனர்.
அப்போது, 150-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தியை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் மகாத்மா காந்தி நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...