மாஸ்கோ: ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் 24 மணி நேரத்தில் 2,558 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்நாட்டில் ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமான நபா்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் அந்நாட்டின் அதிபா் விளாதிமீா் புதின் அதிகாரிகளிடம் காணொலிக் காட்சி வாயிலாக பேசுகையில், ‘‘வரும் நாள்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அச்சூழலை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றாா்.