புற்றுநோய் பாதித்த 4 வயது இந்தியச் சிறுமி, கரோனாவில் இருந்து மீண்டார்
துபையில் வாழும் 4 வயது இந்தியச் சிறுமி, புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனா தொற்றுக்கு ஆளாகி, அதில் இருந்து மீண்டுள்ளார்.


துபை: துபையில் வாழும் 4 வயது இந்தியச் சிறுமி, புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனா தொற்றுக்கு ஆளாகி, அதில் இருந்து மீண்டுள்ளார்.
மருத்துவப் பணியாளராக இருக்கும் அவரது தாய் மூலம், சிறுமி சிவாணிக்கும் தொற்றுப் பரவியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி அவரும், அவரது தாயும் கரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவாணிக்கு ஏற்கனவே புற்றுநோய் பாதித்து கீமோதெரபி சிகிச்சையை பெற்று வருவதால், அவருக்கு கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவாணி மிகவும் அரிதான சிறுநீரக புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சையின் பயனாக அந்த சிறுமி ஏப்ரல் 20ம் தேதி கரோனாவில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருக்கு கரோனா பாதிப்பு தீவிரமடையும் என்று நாங்கள் அச்சமடைந்தோம். ஆனால், நல்லவேளையாக அப்படி எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து இரண்டு முறை அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அரபு நாடுகளில், கரோனா பாதித்து குணமடைந்த மிக இளம் வயது சிறுமியாக சிவாணி கருதப்படுகிறார். ஏற்கனவே, 7 வயது சிரிய நாட்டைச் சேர்ந்த சிறுமியும், அபு தாபியில் 9 வயதான ஃபிலிப்பினோ சிறுவனும் கரோனா பாதித்து குணமடைந்தவர்களாவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...