அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஓராண்டுக்குப் பின் பள்ளிக்குத் திரும்பும் கிரெய்தா

பருவநிலை மாற்ற ஆபத்துகள் குறித்து உலகம் முழுவதும் குரலெழுப்பி வந்த சிறுமி கிரெய்தா துன்பர்கி ஓராண்டுக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பியதை அறிவித்துள்ளார்.

News image
கிரெய்தா துன்பர்கி
Updated On :25 ஆகஸ்ட் 2020, 9:46 am

DIN

பருவநிலை மாற்ற ஆபத்துகள் குறித்து உலகம் முழுவதும் குரலெழுப்பி வந்த சிறுமி கிரெய்தா துன்பர்கி ஓராண்டுக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பியதை அறிவித்துள்ளார்.

உலகில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்ற பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிகிரெய்தா துன்பர்கி. இவர் கடந்த ஓராண்டாக பருவநிலை மாற்றம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வந்தார். 

இந்நிலையில் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான பிரச்சாரத்தின் ஒரு வருடத்தை நிறைவு செய்த கிரெய்தா தான் பள்ளிக்குத் திரும்பியதாக தனது சுட்டுரைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

எந்தப் பள்ளியில் படிக்க உள்ளார் என்பது குறித்த தகவலை அவர் தெரியப்படுத்தவில்லை. அவர் தனது பதிவில், “இறுதியாக மீண்டும் பள்ளியில் சேர மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளி சென்ற கிரெய்தா  அதன்பின் காலநிலை மாற்ற பிரச்னைகள் குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.