உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

அமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 3,157 பேர் பலி

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 3,157 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

News image

அமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 3,157 பேர் பலி (கோப்புப்படம்)

Updated On :3 டிசம்பர் 2020, 11:56 am


வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 3,157 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி 2,603 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானதே உச்சமாக இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு நாள் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது தொடர்பாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இதுவரை 13.9 மில்லியன் மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,73,836-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேநிலை அடுத்தடுத்த நாள்களிலும் நீடித்தால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள மருத்துவமனை படுக்கைகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நிரம்பிவிடும் என்று மேயர் எரிக் கார்சிட்டி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களிலுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்கனவே அதிக அளவில் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.