ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3000 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த சில நாள்களாகவே கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி வருகின்றது.

News image

US daily death toll from COVID-19 tops 3000

Updated On :10 டிசம்பர் 2020, 6:40 am

ANI

அமெரிக்காவில் கடந்த சில நாள்களாகவே கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி வருகின்றது.

இதுதொடர்பாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு 2,89,188 ஆகவும், பாதிப்பு 1,53,84,264 ஆகவும் அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவின் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேநிலை அடுத்தடுத்த நாள்களிலும் நீடித்தால் மருத்துவமனை அனைத்தும் விரைவில் நிரம்பிவிடும் நிலையில் உள்ளது. 

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களிலுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்கனவே அதிக அளவில் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.