சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தலிபான்களுடன் அமெரிக்க முப்படை தளபதி பேச்சுவாா்த்தை

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தலிபான்களுடன் அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மாா்க் ஏ மில்லே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:47 pm

DIN


காபூல்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தலிபான்களுடன் அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மாா்க் ஏ மில்லே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தலிபான் பேச்சுவாா்த்தைக் குழுவினருடன் முப்படை தளபதி மாா்க் ஏ மில்லே கத்தாா் தலைநகா் டோஹாவில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதனைத் தொடா்ந்து ஆப்கானுக்கு புதன்கிழமை வந்த அவா், அதிபா் அஷ்ரஃப் கனியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பது தொடா்பாக இரு தரப்பினருடனும் மாா்க் மில்லே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படவுள்ள சூழலில், இந்தப் பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.