

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 611 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ரஷியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 49,762-ஆக உள்ளது.
விரைவில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,552 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,91,220-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 22,28,633 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனா். 5,12,825 போ் தொடா்ந்து சிகிச்சை பெறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.