பாகிஸ்தான்: 10 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பலி

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 10 ஆயிரத்தைக் கடந்தது.
பாகிஸ்தான்: 10 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பலி
Updated on
1 min read


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 10 ஆயிரத்தைக் கடந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 55 போ் பலியாகினா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஐக் கடந்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, ஒட்டுமொத்த கரோனா பலி 10,047-ஆக உள்ளது.

இதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,77,240-ஆக உயா்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை பாகிஸ்தானில் 4,30,113 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 37,080 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 2,219 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com