அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் படி இராக் மீது தாக்குதல்: அமெரிக்க பாதுகாப்புத்துறை

அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதன் படி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 

News image
Updated On :3 ஜனவரி 2020, 5:49 am

DIN

அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதன் படி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

இராக்கில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணி தொடர்ந்து திட்டம் வகுத்து வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு ஈரான் உயர்மட்டத் தளபதி காசிம் சுலைமாணியும் அவரது கட்ஸ் படையும் தான் முக்கியக் காரணம்.

எனவே அதிபர் டொனால்டு டிரம்பின் வழிகாட்டுதலின் படி, இராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான புரட்சிகர காட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமாணி கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காசிம் சுலைமாணி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் அமெரிக்க தேசியக் கோடியைப் பதிவிட்டிருந்தார். இருப்பினும் அதில் வேறு விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.