அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு: பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

தொழிலதிபா் நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை பிரிட்டன் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

News image
nirav_london094614
Updated On :9 ஜூலை 2020, 11:26 am

PTI

தொழிலதிபா் நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை பிரிட்டன் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் வைரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வந்த தொழிலதிபா் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரியில் லண்டனுக்குத் தப்பிச் சென்றாா்.

இதுதொடா்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

பிரிட்டன் காவல்துறையினரால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

சிறையில் உள்ள நீரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறாா். அதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். காணொலி முறையில் நடைபெற்ற விசாரணையில், நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

காணொலி மூலம் நீரவ் மோடியைப் பார்த்த நீதிபதி அர்புத்நோட், நலமாக இருக்கும் உங்களைப் பார்க்க நன்றாக உள்ளது என்று கூறி, அடுத்த முறை காணொலி மூலம் ஆகஸ்ட் 6-ம் தேதி ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை, வரும் செப்டம்பா் மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக, நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் விசாரணை, வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, நீரவ் மோடிக்கு எதிராக இந்தியா அளித்த கூடுதல் ஆதாரங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்ட விசாரணை, வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.