/

மெக்சிகோவில் ஒரே நாளில் 7,257 பேருக்கு கரோனா: 736 பேர் பலி

மெக்சிகோவில் ஒரே நாளில் புதிதாக 7,257 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,31,298 ஆக உயர்ந்துள்ளதாக மெக்சிகன் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :18 ஜூலை 2020, 6:43 am

மெக்சிகோவில் ஒரே நாளில் புதிதாக 7,257 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,31,298 ஆக உயர்ந்துள்ளதாக மெக்சிகன் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 736 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 38,310 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது அந்த நாட்டில் பரிசோதனைகள் அதிகளவில் நடைபெற்று வருவதால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

தற்போது கரோனா நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிற்கு உதவுவதற்காகத் தனது சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குவதாக மெக்சின் ஆளுநர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.