தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரோனா காலத்தில் உதவியவர்களுக்குத் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்த தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி

சீனாவில் இரு கூட்டத்தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மே 24ஆம் நாள் ஹூபெய்

News image
Updated On :26 மே 2020, 6:52 am

DIN

சீனாவில் இரு கூட்டத்தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மே 24ஆம் நாள் ஹூபெய் மாநிலத்தின் பிரதிநிதிக் குழு, அரசு பணியறிக்கையைப் பரிசீலனை செய்தது. அப்போது வூ ஹான் நகரிலிருந்து வந்திருந்த பிரதிநிதியான யூ செங் தன்னுடைய உரைக்குப் பின்பாக தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்தார். ஒரு பள்ளி ஆசிரியரான யூ செங், தலைகுனிந்து வணக்கம் செய்ததற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.

வூஹான் நகரில் புதிய ரக கரோனா வைரசானது மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருந்த காலத்தில் இதர பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிய யூ செங் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார். வூஹான் நகரைச் சேர்ந்த தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியான அவர், கரோனா பரவல் காலத்தில் வூஹான் நகரில் நிகழ்ந்த உண்மையான சம்பவங்களை எடுத்துரைத்தார்.

Story image

யூ செங்கின் சக பணியாளர் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். அரசு கொடுத்த பன்முக மருத்துவ சிகிச்சையைப் பெற்ற பிறகு அவர்கள் அனைவரும் குணமடைந்தனர்.

அதேபோன்று நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 87 வயதான முதியவர் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தரமான சிகிச்சையின் காரணமாக அவர் குணமடைந்தார்.  

இவ்வாறு கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பலரும் யூ செங்கிடம், நீங்கள் அரசுத் தலைவர் ஷி ச்சிங்பிங்கைச் சந்திக்கும் போது, அவரிடம் எங்களின் நன்றியைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதோடு, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன அரசுக்கும், வூஹான் நகருக்கு உதவி அளித்த நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று இரு கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளும் முன், அவர்கள் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு கரோனா காலத்தில் உதவி புரிந்த அனைவருக்கும் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தியதாகவும் யூ செங் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.