கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிச.2-க்குப் பிறகு பொதுமுடக்கம் நீட்டிப்பு இல்லை: பிரிட்டன் அரசு முடிவு

பிரிட்டனில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. 

News image

போரிஸ் ஜான்சன்

Updated On :22 நவம்பர் 2020, 5:32 am

DIN

பிரிட்டனில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று பிரிட்டன். 

இங்கு கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவிய வைரஸ் தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார். 

இதையடுத்து இரண்டாம் 2 ஆம் அலை பரவத் தொடங்கியதால் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து வருகிற டிசம்பர் 2 ஆம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அதேநேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும் பிரிட்டனில் அடுத்த மாதம் முதல் கரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.