மான்டிரீயல்: கனடாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள முதியோர் காப்பகத்தில் வாழ்ந்து வந்தவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவர் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிரிழந்தவரின் வயது விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இவருடன், அங்குத் தங்கியிருந்த மேலும் இரண்டு பேரும், இரண்டு ஊழியர்களும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கனடாவில் தற்போது 70 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.