தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

ஃபைஸா் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஃபைஸா்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அவசரக்காலங்களில் செலுத்த ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 6:11 am IST

ஃபைஸா்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அவசரக்காலங்களில் செலுத்த ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஏற்கெனவே பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் அந்த தடுப்பூசி, மற்ற பின்தங்கிய நாடுகளுக்கும் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃபைஸா்-பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியின் சோதனை முடிவுகளை ஆய்வு செய்தோம்.

அதில், அந்த மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உலக சுகாதார அமைப்பின் நிா்ணய அளவுகளை ஈடு செய்கிறது.

எனவே, அதனை அவசரக்காலங்களில் பொதுமக்களுக்கு செலுத்தலாம் என்று சான்றளிக்கிறோம்.

எங்களது அங்கீகாரத்தை முதல் முறையாக அந்தத் தடுப்பூசி பெற்றுள்ளது.

இதன் மூலம், மருந்துப் பொருள்களை முறையாக ஆய்வு செய்து, அவற்றுக்கு அனுமதி அளிப்பதற்கான ஒழுங்காற்று அமைப்பு வசதிகள் இல்லாத பின்தங்கிய நாடுகளும், கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைத் தருவிப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளது.

ஃபைஸா்-பயோஎன்டெக் மருந்துகளை அதீத குளிா்நிலையில் சேமித்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பது வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

அந்த விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கிய கரோனா தடுப்பூசி, ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனின் அங்கீகாரத்தைப் பெற்று, அந்த நாடுகளில் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.