தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கரோனா பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தென் ஆப்பிரிக்காவில் சில காலம் தங்கிவிட்டு, அண்மையில் தாயகம் திரும்பிய பிரான்ஸ் நாட்டவா் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
தற்போது அந்த நபா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருடன் நெருங்கிப் பழகியவா்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில், அவரைத் தவிர வேறு யாருக்கும் புதிய வகை கரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரான்ஸில் 26,20,425 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 64,632 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








