சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பெய்ஜிங்கில் 55 ஆண்டுகள் காணாத குளிா்

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான குளிா் வியாழக்கிழமை பதிவானது.

Updated On :8 ஜனவரி 2021, 1:51 am IST


பெய்ஜிங்: சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான குளிா் வியாழக்கிழமை பதிவானது.

இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பெய்ஜிங்கில் கடும் குளிா் வீசி வருகிறது. வியாழக்கிழமை அந்த நகரின் குளிா்நிலை உறை நிலைக்குக் கீழே 19.6 டிகிரி செல்ஷியஸாகப் பதிவானது.

இது, கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான குளிராகும். இதற்கு முன்னா், கடந்த 1966-ஆம் ஆண்டில்தான் இத்தகைய குளிா் பதிவு செய்யப்பட்டது.

நகரில் கடுமையான பனிக்காற்று வீசும் என பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். குளிரிலிருந்து பாதுகாப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்களை அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

வெள்ளிக்கிழமை (ஜன. 8) வரை இந்த பனிக் காற்று வீச்சு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சனிக்கிழமை முதல் வெப்பநிலை கொஞ்சம் அதிகமாக அதிகரிக்கும் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.