பாரீஸ்: பிரான்ஸில் கரோனா பாதிப்பு தீவிரமெடுக்கும் நிலையில், பிரிட்டன் மற்றும் தென்னாப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா பாதிப்பும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால், ஜனவரி மாதம் வரை உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள் எதுவும் திறக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
தற்போது பிரான்ஸில் நிலைமை மோசமடைந்துள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்பும் சூழ்நிலை வெகுதொலைவில் உள்ளது. தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது, டிசம்பர் மாத மத்தியில் இருந்து தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது அதுவே 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளில் பாதிக்கம் மேல் கரோனா நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளது.
தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட அதிதீவிர கரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா தொடக்கம்!
தமிழக முதல்வராகப் பதவியேற்றார் விஜய்!

விஜய் பதவியேற்பு விழா: த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு!

முதல்வர் விஜய் அமைச்சரவை! புதிய அமைச்சர்கள் யார், யார்?
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

