பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

டிரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்: சொந்தக் கட்சி எம்பிக்கள் ஆதரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்தில் அவரது குடியரசுக் கட்சி எம்பிக்களே அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

News image

டிரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்: சொந்தக் கட்சி எம்பிக்கள் ஆதரவு

Updated On :14 ஜனவரி 2021, 6:17 am

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்தில் அவரது குடியரசுக் கட்சி எம்பிக்களே அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இந்நிலையில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு சபை தலைவர் நான்சி பெலோசி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க 25-ஆவது சட்டத்திருத்தத்தின் அதிகாரங்களை செயல்படுத்தும்படி துணை அதிபர் மைக் பென்ஸை வலியுறுத்தி பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்தை நான்சி பெலோசி கொண்டுவந்தார்.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் பதிவாகின. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள அதிபராக டிரம்ப் மாறியுள்ளார்.

இந்த கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த கண்டனத் தீர்மானம் தொடர்பாக செனட் சபையில் விசாரணை நடத்தப்படும். எனினும் டிரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால் டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க முடியாது என அரசியல் வல்லுநர்கள் தெர்வித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.