கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நேபாளத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மே 14 வரை மூட அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் குறித்து இன்று நடைபெற்ற நேபாள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற மே 14 ஆம் தேதி வரை நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. மேலும் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரபு ஷா தெரிவித்தார்.
முன்னதாக, கரோனா அதிகம் பரவும் இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களை மட்டும் மூடுமாறு அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், காத்மண்டு, லலித்பூர், பக்தாபூர், கஸ்கி, ரூபாண்டேஹி, சிட்வான், பாங்கே, பார்சா, கைலாலி, மொராங், டாங், சுர்கேத், பரா மற்றும் பங்களங் ஆகியவை கரோனா பரவும் மாவட்டங்களாக நேபாள அரசு வகைப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லேயா்கேம்பில் முளைப்பாரி ஊா்வலம்
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
பெண்ணை மிரட்டிய வழக்கு: யூடியூபா் கைது

கங்கை நதியில் மாசுபாடு குறைந்து வருகிறது: மத்திய அரசு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


