கரோனாவுக்கு உலகளவில் 31.48 லட்சம் பேர் பலி: பாதிப்பு 14.93 கோடியாக அதிகரிப்பு
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.93 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 31.48 லட்சமாக அதிகரித்துள்ளது.


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.93 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 31.48 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆண்டு மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 14,93,49,138 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 31,48,934 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,70,20,098 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,91,80,106 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,279 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,29,27,091 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5,87,384-ஆக உயர்ந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 52,046 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 885 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,79,97,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,01,187 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,446,541 -ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 76,085 பேருக்கு தொற்று பாதிப்பும், 3,120 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,95,324 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...