எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தாய்லாந்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம்

மோசமான முறையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி தாய்லாந்தில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

News image
தாய்லாந்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம்
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:12 pm

DIN

மோசமான முறையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி தாய்லாந்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக் கோரி தலைநகர் பாங்காக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கைகளில் பிரதமர் பதவி விலகக்கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் செல்லும் பாதையை அடைத்த காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தைக் கலைத்தனர்.

தாய்லாந்தில் இதுவரை 7,36,522 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,066 பேர் தொற்று பாதிப்பினால் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.