அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தீவிரமாகும் டெல்டா கரோனா: திணறும் ஆஸ்திரேலியா

 ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்று மாநிலங்களில் மொத்தமாக 282 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஆகஸ்ட் 2021, 7:04 am

DIN

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்று மாநிலங்களில் மொத்தமாக 282 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டெல்டா வகை கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 282 பேருக்கு கரோனா இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் தலைநகரான சிட்னியில் கடந்த ஆறு வார காலமாக ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், இன்று மட்டும் 262 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "சுகாதார விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன். அவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்" என்றார்.

நியூ சவுத் வேல்ஸ் மருத்துவமனையில் 362 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில், 58 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 54 பேர் தடுப்பூசி செலுத்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.