ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பரவல்..திணறும் சீனா
ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகிறது.


சீனாவில் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று (செவ்வாய்கிழமை) அதிகரித்துள்ளது. பரிசோதனை மையத்திலிருந்து பரவ தொடங்கிய கரோனா சீனாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்
ஆனால், தற்போது டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகிறது. செவ்வாய்கிழமை மட்டும் 143 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு யாங்சோ நகரத்திலிருந்து கரோனா பரவ தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...