டாக்காவில் காளி கோயிலை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்
50 ஆண்டுகளுக்குப் பின் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ ராம்னா காளி கோயிலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்துவைத்தார்.


டாக்கா: வங்கதேசத் தலைநககர் டாக்காவில், 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் அழிக்கப்பட்ட நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பின் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ ராம்னா காளி கோயிலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்துவைத்தார்.
இந்த கோயில், இந்தியா - வங்கதேச மக்களிடையேயான கலாச்சார மற்றும் ஆன்மிக நல்லுறவை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
பாகிஸ்தானிடமிருந்து விடுதலைபெற்று, 1971ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதன் பொன் விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க, வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத்தின் அழைப்பை ஏற்று இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது, புனரமைக்கப்பட்ட காளி கோயிலை திறந்து வைத்த ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவீதா கோவிந்த், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...