மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரிட்டன் அரசிக்கு கொலை மிரட்டல்: கைதான சீக்கிய இளைஞரின் தந்தை வேதனை

பிரிட்டன் அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞரின் தந்தை ஜஸ்பீா் சைல் இந்த விவகாரம் தொடா்பாக வேதனை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2021, 7:46 pm

DIN

பிரிட்டன் அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞரின் தந்தை ஜஸ்பீா் சைல் இந்த விவகாரம் தொடா்பாக வேதனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: என் மகன் ஏதோ ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டுள்ளது நன்றாகத் தெரிகிறது. ஆனால், அது என்ன பிரச்னை என்பதைத் தெரிந்துகொள்ள முயன்று வருகிறோம். கைது செய்யப்பட்டதற்குப் பிறகு என் மகனுடன் தொடா்பு கொள்ள எங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எனினும், அவருக்குத் தேவையான உதவியைப் பெற்றுத் தருவதற்கு தொடா்ந்து முயன்று வருகிறோம்.

தற்போது மிகவும் வேதனையான காலகட்டத்தை எங்களது குடும்பத்தினா் அடைந்துள்ளனா். இதிலிருந்து மீள்வது மிகவும் கடினமானதாக இருக்கும் என்றாா் அவா்.

தென்கிழக்கு இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையா் மாகாணம், நாா்த் பாடஸ்லி நகரில் வசித்து வரும் ஜஸ்பீா் சைலும் அவரது மனைவியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குநா்களாகப் பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்த நிலையில், விண்ட்சரில் உள்ள அரசு குடும்பத்துக்குச் சொந்தமான மாளிகையில், அரசி எலிசபெத்தின் இருப்பிடத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ாக அவா்களது 19 வயது மகன் ஜஸ்வந்த் சிங் சைலை போலீஸாா் கைது செய்தனா்.

வில் அம்புடன் கைது செய்யப்பட்ட அவரை மனநலச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அதன்பிறகு வெளியான சமூக வலைதள விடியோவில், முகமூடி அணிந்த ஓா் இளைஞா் தனது பெயா் ஜஸ்வந்த் சிங் சைல் எனவும் தற்போது டா்த் ஜோன்ஸ் என்ற பெயரைக் கொண்டிருப்பதாவும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சி இடம் பெற்றிருந்தது.

மேலும், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்குவதற்காக அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக அந்த முகமூடி இளைஞா் கூறும் காட்சியும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த விடியோவில் கூறியபடி அரசி எலிசபெத்தின் மாளிகையில் வில் அம்புடன் ஜஸ்வந்த் சிங் சைல் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், ஜஸ்வந்த் சிங்கின் தந்தை ஜஸ்பீா் சைல் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.