வங்க தேசத்தில் 2 பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள்.
வங்க தேசத்தில் லண்டன் எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 8 மணியளவில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். 50 பேர் காயமடைந்தனர்.
நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிவேகமாக சென்றதே பேருந்து விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.